For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” - தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

08:38 PM Mar 09, 2024 IST | Jeni
“ஒன்றாக போராடுவோம்  ஒன்றாக வெற்றி பெறுவோம்   ”   தொகுதி பங்கீட்டுக்கு பின் கே சி வேணுகோபால் பேட்டி
Advertisement

திமுக கூட்டணியில் 10 மக்களவை தொகுதிகள் காங். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தலில் ஒன்றாக போராடி, ஒன்றாக வெற்றி பெறுவோம் என்று காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

அதன்படி ஏற்கனவே ஐயூஎம்எல், கொமதேக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக என அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடை இறுதி செய்தது. இதில் மக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எனவும், ஒரு மாநிலங்களவை தொகுதியை மட்டும் திமுக ஒதுக்கும் எனவும் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் இரண்டாம் கட்டமாக திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக், காங். மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் காங். கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து பேசிய காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் காங்கிரஸ் முழு ஆதரவு வழங்கும். இந்த முறை 40 தொகுதிகளிலும் எங்களின் கூட்டணி வெற்றி பெறும். திமுக - காங். உறவு எப்போதும் பிரியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒன்றாக போராடுவோம், நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement