For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மருத்துவக் கல்லூரி டீன் ராஜிநாமா!

02:18 PM Aug 12, 2024 IST | Web Editor
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை விவகாரம்  மருத்துவக் கல்லூரி டீன் ராஜிநாமா
Advertisement

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ்  ராஜிநாமா செய்துள்ளார்.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பணிக்கு வந்த பெண் பயிற்சி மருத்துவர், அடுத்தநாள் காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : வீட்டில் துப்பாக்கிகளை சுத்தம் செய்த பெண்! வைரலான வீடியோவால் பரபரப்பு!

இந்நிலையில், மாணவர்களின் போராட்டதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி தலைவர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, மேற்கு வங்க பாஜக தலைவரும், கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கவுஸ்தாவ் பாக்சி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், ஓய்வு அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார். பெண் மருத்துவர் கொலை வழக்கில் எவ்வித குறுக்கீடுகளுமின்றி முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தவும் மாநில அரசுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Tags :
Advertisement