For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : நீதிபதிகளின் சராமாரி கேள்வியும், தமிழக அரசின் பதிலும்..!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரிடம் நீதிபதிகள் சராமாரி கேள்விகளை எழுப்பினர்.
06:59 PM Oct 10, 2025 IST | Web Editor
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரிடம் நீதிபதிகள் சராமாரி கேள்விகளை எழுப்பினர்.
உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு    நீதிபதிகளின் சராமாரி கேள்வியும்  தமிழக அரசின் பதிலும்
Advertisement

கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழ் நாடு அரசு  ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

Advertisement

மேலும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தது. அத்துடன் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் அமைத்தது.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த 5 வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள்,

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்டது, அப்படி இருக்கையில் சென்னை இருக்கக்கூடிய பிரதான கிளையில் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதை விவரிக்க வேண்டும்.  தேர்தல் பிரச்சாரம மேற்கொள்வது, road show நடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கிரிமினல் மனுவாக எப்படி பதியப்பட்டது? மதுரை, சென்னை நீதிமன்றங்கள் ஒரே நாளில் வேறு வேறு உத்தரவுகளை எப்படி பிறப்பித்தன? சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து எப்படி எஸ் ஐ டி உத்தரவு பிறப்பித்தது ஏன்.? SOP விவகாரம் ஏற்கனவே தீர்க்கப்பட்டதா?  உயிரிழந்தவர்களுடைய உடல்களை உடற் கூர் ஆய்வு இரவிலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. உடற்கூறாய்வு நடத்துவதற்கான அங்கு இருக்கக்கூடிய கட்டமைப்பு என்ன எத்தனை உடற்கூறு ஆய்வுக்கான டேபிள் உள்ளது..? ஆகிய அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்

அவற்றிற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு,

கரூர் சம்பவத்தில் 41 உயிரிழப்புகள் நடந்துள்ளன, இது கொடூரமானது எனவேதான் நீதிமன்றம் இதனை கையில் எடுத்து உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. உயிரிழப்பு தொடர்பான விவகாரம் என்பதால், வழக்கு கிரிமினல் வழக்காக இருப்பதாக நீதிமன்ற பதிவாளர் அதை உரிய நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டார்.

கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, குறிப்பிட்ட இடத்தில் விஜய் 12 மணிக்குப் வருவதாக கூறிவிட்டு மிக தாமதமாக வந்ததால் விபத்து நடந்துள்ளது. இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணை குழு அதிகாரியை நியமிக்கவில்லை மாறாக உயர் நீதிமன்றம் தான் நியமித்தது. "அஸ்ரா கர்க்" என்ற மூத்த அதிகாரி தான் சிறப்பு விசாரணை குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர்.

மேலும் தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. மேலும் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் மாவட்ட நிர்வாகத்தினுடைய அனுமதி பெற்று இரவில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.அதே வேளையில் தேர்தல் பரப்புரையின் போது ரவுடிகள் களம் இறக்கப்பட்டார்கள் ஆளுங்கட்சிணருடைய நபர்கள் களமிறக்கப்பட்டார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்க முடியாது. இதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இரவில் உடற்கூறாய்வு அது நடத்தப்பட்டது. பாதுகாப்பு குறைபாடு என்று கூறுகிறார்கள் ஆனால் 600 காவல்துறையினர் அதற்காக அந்த பிரச்சாரத்திற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பட்டிருக்கிறார்கள். நண்பகல் 12 மணிக்கு வரவேண்டிய விஜய் இரவு 7:00 மணிக்கு அவர் வந்திருக்கிறார் காலை முதலே அந்த பகுதியில் குழுமி இருந்த அந்த கூட்டமானது தண்ணீர் உணவுகள் இன்றி தவித்து பலர் சோர்வடைந்து மயக்கநிலை அடைந்தார்கள் என்று தெரிவித்தது.

இறுதியாக நீதிபதிகள் வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று  விரிவான பிரமாண பத்திரமர தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும்  பிற மனுதாரர்கள் எழுத்துப்பூர்வவாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement