For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்" - செல்லூர் ராஜூ பேட்டி!

02:51 PM Dec 10, 2023 IST | Web Editor
 திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்    செல்லூர் ராஜூ பேட்டி
Advertisement

திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.

Advertisement

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு அனைத்துமே செய்துவிட்டோம் எனக்கூறிய அமைச்சர்கள் கடைசி வரை எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் முதலமைச்சரையும் ஏமாற்றிவிட்டனர். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் மக்கள் தங்கள் உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்: தாமிரபரணியில் அதிகரிக்கும் நீர்வரத்து – கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலில் ஒரு சீட்டுக்காக திமுகவிற்கு லாலி பாடுகிறார். திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார். அவர் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்கமாட்டார்கள். துன்பத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக அவர் பேசவில்லை.

தொடர்ந்து பதுங்கு குழியில் இருந்து கமல்ஹாசன் தான் தற்போது வெளிவந்துள்ளார். அவர் அரசியல் நாகரிகமற்றவர். மதுரையில் கட்சி தொடங்கி வீராப்பாக பேசிய கமல்ஹாசனின் வீராப்பு இப்போது எங்கே சென்றது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement