For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

09:39 AM Apr 09, 2024 IST | Web Editor
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா  டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement

அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 

Advertisement

டெல்லியில் மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சரும்,  ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை,  கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.  இதனைத்தொடர்ந்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் விசாரணையில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்,  இந்த வழக்கில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரம் உள்ளது எனவும் மனுதாரருக்கு (கேஜரிவால்) எதிராக பிறப்பிக்கப்பட்ட முதலாவது ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.  மேலும் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் மீது இந்த மனு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு வாதாடினார்.  இருதரப்பையும் கேட்ட நீதிபதி வழக்கின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக கூறி,  தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வைத்தார்.  இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படவுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையப்ப பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement