"இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி" - பிரதமர் மோடி!
நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் ஆட்சி குறித்தும், பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
The last 11 years have marked significant changes in our defence sector, with a clear focus on both modernisation and becoming self reliant when it comes to defence production. It is gladdening to see how the people of India have come together with the resolve of making India… https://t.co/kQFrjLcc5Z
— Narendra Modi (@narendramodi) June 10, 2025
"கடந்த 11 ஆண்டுகளில் நமது பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியைப் பொறுத்தவரை தன்னிறைவு பெறுதல் ஆகிய இரண்டிலும் தெளிவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.