For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா?” – டிரம்ப், மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி!

பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா? என டிரம்ப், மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
09:47 PM Jun 18, 2025 IST | Web Editor
பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா? என டிரம்ப், மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
“பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா  அல்லது முழு பருப்பும் கருப்பா ” – டிரம்ப்  மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி
Advertisement

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் முற்றியது. இதில் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான சிந்து ஒப்பந்தம், வர்த்தக செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்திய எல்லைகளில் தாக்குதல் நடத்தியது.

Advertisement

பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக பேச்சுவார்த்தையால் மத்தியஸ்தம் செய்ததாக கடந்த மே 10 ஆம் தேதி அறிவித்த பிறகு இரு நாடுகளிடையே அமைதி நிழவியது. இது குறித்து எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில், டிரம்ப் அழைப்பால் மோடி சரணடைந்தார் என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சு வார்த்தையை பிரதமர் மோடி நிராகரித்ததாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக டிரம்ப் மாநாட்டில் பங்கேற்காததால் அவருடன் தொலைசியில் மோடி உரையாடினார். இந்த உரையாடல் குறித்து விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மத்தியஸ்தம் குறித்து அமெரிக்காவால் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று பிரதமர் மோடி அதிபர் டிரம்பிடம் தெளிவாகக் கூறினார்.

ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது  குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், இரு படைகள் தரப்பிலும் நேரடியாக விவாதிக்கப்பட்டது. இது பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் செய்யப்பட்டது. இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியின் கருத்துக்களை புரிந்துகொண்டார்” என்று கூறினார்.

இந்த நிலையில் விக்ரம் மிஸ்ரி கூறியது தொடர்பாக  காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்த காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பதிவில், “நரேந்திர மோடி டொனால்ட் டிரம்பிடம் 'போர் நிறுத்தத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை, நாங்கள் எந்த மத்தியஸ்தத்தையும் ஏற்கவில்லை' என்று தெளிவாகத் தெரிவித்ததாகக் கூறினர். வர்த்தகம் காரணமாக போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. ஆனால் சில மணி நேரங்களுக்குள், டிரம்ப் இப்போது "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நான் நிறுத்தினேன். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். மோடி ஒரு அற்புதமான மனிதர். நேற்று இரவு நான் அவருடன் பேசினேன். இப்போது நாங்கள் அவருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவோம்.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து போரை நிறுத்துவதில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் செல்வாக்கு செலுத்தினார். இந்தியாவிலிருந்து மோடியும் மற்றவர்களும் அதைச் செய்தார்கள். ஆனால், நான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று கூறியுள்ளார்.

இது உண்மையில் மிகவும் குழப்பமானதாக உள்ளது. மோடி அரசு வேறு ஒன்றைச் சொல்கிறது, டிரம்ப் தனது சொந்த கூற்றில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார் - கடந்த 38 நாட்களில் இப்போது 15 வது முறையாக அவர் கூறியுள்ளார். உண்மை என்னவென்றால், போர் நிறுத்தம் பற்றிய தகவல்களை முதலில் டிரம்பால் தெரிவிக்கப்பட்டது.  இந்திய அரசால் அல்ல. நரேந்திர மோடியால் தொலைபேசியில் டிரம்பிடம் சொன்னதாகக் கூறப்படும் அனைத்தையும் வெளிப்படையாகக் கூற முடியவில்லை ஏன்? பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா?”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
Advertisement