ஐபிஎல் எலிமினேட்டர் | குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு!
10 அணிகள் இடையிலான 18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று (மே.29) நடைபெற்றது. இதில், பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படியுங்கள் : புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர்… அடுந்த நொடி நடந்த பயங்கரம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!
தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டியில் குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் வெற்றிபெறும் அணி குவாலிஃபையர் போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் அணியுடம் மோதும். இதில் வெற்றிபெறும் அணி ஜுன் 3ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது.
இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இன்றைய போட்டியில் வென்று இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக விளையாடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரபுக்கு பஞ்சம் இருக்காது.