For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை!

07:28 AM Nov 11, 2023 IST | Web Editor
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு  ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை
Advertisement

மதுரையில் கனமழை காரணமாக, வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வருசநாடு, வெள்ளிமலை, கொட்டகுடி ஆறு, அரசரடி, மூல வைகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை 70 அடி முழு கொள்ளளவை எட்டியது. எனவே வைகை அணையில் இருந்து உபரி நீரானது வெளியேற்றப்படுகிறது. இதுபோன்று வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், வைகை ஆற்றுக் கரையோரத்தில் மீனாட்சி கல்லூரியில் இருந்து செல்லூருக்கு செல்லக்கூடிய சாலை மற்றும் ஆழ்வார்புறத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

போக்குவரத்து காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை வைத்து வாகனங்களை தடுத்து வேறு வழிகளில் செல்ல அறிவுறுத்துகின்றனர். இதனிடையே வைகையாற்று கரையோரங்களில் பொதுமக்கள் செல்லவோ ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement