For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வருமான வரி விதிப்பில் என்ன மாற்றம்? நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

01:58 PM Jul 23, 2024 IST | Web Editor
வருமான வரி விதிப்பில் என்ன மாற்றம்  நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
Advertisement

வருமான வரியில் நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றினார். அவரது உரையில், வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனி நபர்களுக்கான வருவாயில் ரூ. 3 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு ரூ.10 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு ரூ.15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டுதோறும் வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. இது தற்போது ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Tags :
Advertisement