For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா” - இபிஎஸ் பரபரப்பு பேட்டி!

உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
02:43 PM Mar 17, 2025 IST | Web Editor
உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா”   இபிஎஸ் பரபரப்பு பேட்டி
Advertisement

தமிழ்நாடு  சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது தோல்வி அடைந்ததுள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisement

அப்போது அவர் பேசுகையில்,  “எங்களுடைய ஆட்சியில் எந்தவித பிரச்சனையும் கிடையாது அதனால்தான் பேசுவதற்கான அதிகமான நேரம் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை.சட்டப்பேரவை தலைவரர் தனித் தீர்மாணத்தின் மீது நான் பேசியதை ஒளிபரப்பு செய்யவில்லை. சபாநாயகர் என்பவர் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்கு என்று இல்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும்.

ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பும் பொழுது அதற்கு அமைச்சர் பதில் கூற வேண்டும் தவிர சபாநாயகர் பதில் கூறக்கூடாது. அப்படி சபாநாயகர் பதில் கூறினால் அது நடுநிலையாக இருக்காது. அது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவர் பேசுவதாக தான் இருக்கும். தனி தீர்மானத்தின் மீது எங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிந்துதான் சபாநாயகர் மீது தனி தீர்மானத்தை கொண்டு வந்தோம்.

மக்களுக்கு நியாயம் வெளியில் தெரிய வேண்டும் என்பதால் கொண்டு வந்தோம்.ஓபிஎஸ்-க்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை அதனால் தான் அவர் எங்களுக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். சபாநாயகர் அவரது இருக்கையில் அமர்ந்து கொண்டு முதலமைச்சர் என்ன கூறுகிறாரோ அதன்படி தான் அவர் செயல்படுகிறார்.

கடன் அளவை குறைத்து இருக்கிறோம் என்று மக்களை ஏமாற்ற தான் இவர்கள் கணக்கு வழக்கை மக்களிடத்தில் கூறுவது போல கூறுகிறார்கள். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது அனைவரும் தெளிவாக தான் உள்ளார்கள். நான்கு ஆண்டு கால ஆட்சியில் திமுக எந்த வித புதிய அறிவிப்பும் அறிவிக்கவில்லை. கடனை மட்டும் தான் வாங்கிக் கொண்டிருக்கிறது.

அமலாக்கத்துறையை கண்டு ஏன் அமைச்சர் பயப்படுகிறார். நீதிமன்றம் செல்லுங்கள் உங்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை நிரூபியுங்கள். நீங்கள்தான் வழியில் பயமில்லை மடியில் கணமில்லை என்று சொல்கிறீர்களே. என் மீதும் நான் குற்றம் சாட்டினார்கள் நான் நீதிமன்றம் சென்றேன் முறையாக அந்த நீதிமன்றம் வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என கூறியது.  அதுபோல உங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு நீதிமன்றம் செல்லுங்கள் நீதிமன்றம் மூலமாக நீங்கள் நிரபராதி என நிரூபித்து காட்டுங்கள். உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா”

இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement