Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் - செல்வப்பெருந்தகை பேட்டி!

யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12:49 PM Jun 22, 2025 IST | Web Editor
யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Advertisement

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர்,

Advertisement

"ஏற்கனவே இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. வலுவாக இருக்கிறது. எல்.முருகன் கூறுவது போன்றோ, பாஜக தலைவர் கூறுவது போன்றே இந்த கூட்டணி இல்லை. எங்கும் எந்தவிதமான ஓட்டையும் கிடையாது.

நெல்லிக்காய் மூட்டை தான் சிதறும். சிதறுவதற்கு இது நெல்லிக்காய் மூட்டை கிடையாது. சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தால் நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கிறார்கள். ஏதாவது குளிர் காயலாமா ஆதாயம் ஏற்படுமா என, ஒரு ஆதாயமும் ஏற்படாது எந்த குளிரும் காயமுடியாது. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார். தமிழகத்தில் முருகன் மாநாடு எதற்காக நடத்துகிறார்கள் அயோத்தியில் ராமர் நாடியதற்காக நடத்தினார்கள்? அயோத்தியில் ராமர் பாஜகவை கைவிட்டு விட்டார்.

மக்களை நம்பி பாஜக கிடையாது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பாஜக. இதுவரை மணிப்பூருக்கு பிரதமர் போகவில்லை. மணிப்பூருக்கு செல்லாமல் இங்கே முருகன் மாநாடு என்றால் முருகன் மன்னித்து விடுவாரா? தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி தராமல் தரமால் மறுதலைக்கிறீர்கள். தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் உங்களை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார்.

தமிழ் கடவுள் முருகனை ஏமாற்றி வேஷம் போட முடியுமா? பாஜக வேசம் சில மக்களை ஏமாற்றலாம். முருகனை ஏமாற்ற முடியாது. அமித்ஷாவின் மகனே ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட, விளிம்பு மக்களே தற்போது ஆங்கிலம் பேசுகிறார்கள். அங்கேயும் அரசியல் இருக்கிறது இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை

இபிஎஸ் ஆங்கில சொல்லா? அல்லது தமிழ்சொல்லா? எடப்பாடி பழனிச்சாமையை பார்த்து இபிஎஸ் என்கிறார் அமித்ஷா. அவ்வாறென்றால் எடப்பாடி பழனிசாமியை அவமானபடுத்துகிறாரா? காங்கிரஸ் இருக்கும் வரை தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை இவர்கள் வந்த பிறகு மூன்றாவது மொழியை திணிக்கிறார்கள்.

தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்கிறார்கள் முருகன் இருக்கிறார் என்றால் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்வார்?தமிழ் மொழியை சிதைக்கிறீர்கள், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள். அப்போது தமிழ் கடவுள் முருகன் ஏற்றுக் கொள்வார்கள்? தமிழகத்திற்கு துரோகம் செய்கிறீர்கள்.

தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் சூரசம்காரம் 2026 தேர்தலில் செய்வார். விபூதி வைத்ததற்கு எரிச்சல் இருந்திருக்கும் அல்லது உபாதை இருந்திருக்கும் அதனால் அழித்து இருப்பார்கள். விபூதி அளிப்பது என்பது அரசியல். அதை அரசியல் படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
2026 ElectionsBJPCongressDMKkovaimuruganPressMeetSelvapperundhagaisoorasamharam
Advertisement
Next Article