For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர் உங்களை ஏமாற்ற மாட்டார்" - காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி!

09:37 PM May 17, 2024 IST | Web Editor
 ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்  அவர் உங்களை ஏமாற்ற மாட்டார்    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
Advertisement

ரேபரேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன், அவர் உங்களை ஏமாற்ற மாட்டார் என்று கூறினார்.

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கான கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கான 4ம் கட்ட தேர்தல் கடந்த 13ம் தேதி நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.  இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ரேபரேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது, "நான் என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.  நீங்கள் என்னை உங்களில் ஒருவராகக் கருதியது போல,  அவருக்கும் அதே அன்பையும் பாசத்தையும் வழங்குங்கள்.  ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்.

தனது வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து என்னவென்றால், ரேபரேலி மக்கள் தனக்கு 20 ஆண்டுகள் எம்பி-யாக பணியாற்ற வாய்ப்பு அளித்தது.  ரேபரேலி மக்கள் எனது குடும்ப உறுப்பினர்கள்.  இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றியினை மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்திராகாந்திக்கும் ரேபரேலிக்கும் ஓர் சிறப்பான உறவு இருந்தது.  இந்திரா காந்தி மற்றும் ரேபரேலி மக்கள் எனக்கு வழங்கிய அதே போதனைகளை,  ராகுல் காந்திக்கும், பிரியங்காவுக்கும் நான் கொடுத்துள்ளேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement