"பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!
அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"இந்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான ப.சிதம்பரம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 குறித்துப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதமாகக் குறைத்துள்ளதனையும், வருவாய் பற்றாக்குறையை 41ஆயிரத்து 635 கோடியாகக் குறைத்ததையும் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளார்.
ஒரு அரசின் முதலீட்டு அளவை பொறுத்தே வளர்ச்சி இருக்கும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு தனது முதலீட்டு அளவை 22.4% அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறப்பாக வாழ்த்தியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.