For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன!" - #SakshiMalik

07:03 PM Sep 06, 2024 IST | Web Editor
 எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன      sakshimalik
Advertisement

எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நான் நிராகரித்துவிட்டேன் என மல்யுத்த வீராங்களை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தாய்நாடு திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹரியானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா அவரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து வினேஷ் போகத் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. மேலும், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் அவர் வகித்து வந்த வேலையில் இருந்தும் ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸில் இணைந்தனர். இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.

இதுகுறித்து மல்யுத்த வீராங்களை சாக்‌ஷி மாலிக் பேசியதாவது, ''பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நான் நிராகரித்துவிட்டேன். விளையாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால், மல்யுத்தத்தில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளேன்.

எங்களின் கிளர்ச்சி, பெண்களுக்கான எங்கள் போராட்டம் தவறானதாகிவிடக் கூடாது. எங்கள் போராட்டம் தொடரும் என்பதே என் கருத்து. இந்திய மல்யுத்த சம்மேளனம் சுத்தப்படுத்தப்பட்டால்தான் பெண்கள் (வீராங்கனைகள்) மீதான சுரண்டலுக்கு முடிவு கிடைக்கும். எங்கள் போராட்டம் நேர்மையானது. அது தொடரும்'' என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement