For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்! மேலும் 2 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு!

06:43 PM Jan 24, 2024 IST | Web Editor
சி வி சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்  மேலும் 2 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரண்டு அவதூறு வழக்குகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம் மற்ற இரண்டு வழக்குகளை ரத்து செய்ய மறுத்துள்ளது.

Advertisement

12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதலமைச்சரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்தது.  இந்நிலையில், இவற்றை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்;கிரிக்கெட் விளையாடிய புளூஸ்டார், சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர்!

அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி கூறியதாவது,  "முதலமைச்சரை தாக்கியோ, நேரடியாகவோ பேசவில்லை என்றும், தமிழ்நாடு அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப்பெறும்போது, தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும்" என வாதிட்டார். அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வதாக குற்றம்சாட்டினார்.

அப்போது நீதிபதி கூறியாதாவது, "அரசை விமர்சித்த அதேவேளையில், முதலமைச்சர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது" என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "அரசையும் முதலமைச்சரையும் விமர்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசிவிட்டு, நேரடி தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும்" என கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசை கண்டு தமிழ்நாடு அரசு பயப்படுவதாகவும், கஞ்சா முதலமைச்சர் என விமர்சித்ததற்காக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதற்காக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, விசாரணையை எதிர்கொள்ளவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement