For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் - புதிய அட்டவணை வெளியீடு!

04:00 PM Dec 10, 2023 IST | Web Editor
தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள்   புதிய அட்டவணை வெளியீடு
Advertisement

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 11) நடைபெறவிருந்த அரையாண்டுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரையாண்டுத்தேர்விற்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இதனிடையே மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் புதிய அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அரையாண்டு தேர்வு கால அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 13-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement