For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் - சென்னை திரும்பிய அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகளுக்கு உற்சாக வரவேற்பு.!

06:27 PM Nov 20, 2023 IST | Web Editor
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம்   சென்னை திரும்பிய அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகளுக்கு உற்சாக வரவேற்பு
Advertisement

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம்  வென்று சென்னை திரும்பிய அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

66 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில்
தங்கம் வென்ற தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மகள் நிலா
ராஜாவிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகளான நிலா ராஜா
டெல்லியில் நடைபெற்ற 66 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தங்கம் வென்றார்.  இந்த நிலையில் டெல்லியில் இருந்து
விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது மகள் நிலாவை விமான நிலையத்தில் வரவேற்றார்.. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி. ஆர்.பி. ராஜா மகள் நிலா
ராஜா தெரிவித்ததாவது..

” தமிழ்நாட்டிற்கு முடல் முறையாக பதக்கம் வென்ற போது மிகவும் பெருமையாக இருந்தது.
அதே போன்று இரண்டாவது முறையும் பதக்கம் வென்றதில் மிக பெருமையாக உள்ளது.
அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் போட்டியில் வெற்றி பெற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தாத்தா என்னை அழைத்து வாழ்த்து
கூறினார். உதய் மாமாவும் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினார்.

சர்வதேச அளவில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் தமிழ்நாட்டில் கட்டி தருவதாக
உதய் மாமா கூறினார். அது கூடிய விரைவில் தமிழ்நாட்டிற்கு வரும். அது வந்த
பிறகு சர்வதேச போட்டிகளும் இங்கு நடைபெறும் என்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அனைத்து விளையாட்டுகளிலும் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில்
விளையாடி வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.” என நிலா ராஜா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement