For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சினிமாவில் வாய்ப்பு தருவதாக அக்‌ஷய் குமாரின் பெயரை பயன்படுத்தி மோசடி!

03:02 PM Apr 12, 2024 IST | Web Editor
சினிமாவில் வாய்ப்பு தருவதாக அக்‌ஷய் குமாரின் பெயரை பயன்படுத்தி மோசடி
Advertisement

நடிகர் அக்‌ஷய் குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி,  மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார்.  இவர் நடிகர்,  தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.  கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் அக்‌ஷய் குமார்.  56 வயது ஆகியும் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களிலும்,  ஆக்சன் படங்களிலும், அதிரடியான காட்சிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்.  இவர் 2.O,  கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

இந்த நிலையில்,  அக்‌ஷய் குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  பிரின்ஸ் குமார் சின்ஹா (29) என்ற நபர் சமூக ஊடங்களில் பிரபலமான பூஜா ஆனந்தனியைத் தொடர்பு கொண்டு, தன்னை ரோஹன் மெஹ்ரா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அக்‌ஷய் குமாரின் தயாரிப்பு நிறுவனமான கேப் ஆஃப் குட் பிலிம்ஸின் ஊழியர் என்றும் கூறியுள்ளார்.

மேலும்,  அவர் நிர்பயா வழக்கை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும்,  படத்தில் வாய்ப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.  அவர்கள் இருவரும் முதலில் காஃபி ஷாப் ஒன்றில் சந்தித்துள்ளனர்.  மீண்டும் மும்பை ஜூஹுவில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் சந்திக்க அவர் ஏற்பாடு செய்தார்.

அவரின் மேல் சந்தேகமடைந்த பூஜா,  அக்‌ஷய் குமாரின் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர் ஏமாற்றுவதை உறுதிபடுத்தினர்.  பின்னர் பூஜா ஜூஹூ காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனையடுத்து போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

Tags :
Advertisement