For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"துப்பாக்கி முனையில் கடத்தி நடத்தப்பட்ட கட்டாயத் திருமணம்" | அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்த கூட்டணியை, துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றது என விமர்சித்துள்ளார்
11:31 AM Apr 18, 2025 IST | Web Editor
 துப்பாக்கி முனையில் கடத்தி நடத்தப்பட்ட கட்டாயத் திருமணம்    அதிமுக   பாஜக கூட்டணி குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக பல முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக முயற்சித்து வந்தது.

Advertisement

அதன் முக்கிய பகுதியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷா இந்த கூட்டணியை உறுதி செய்தார். இதன் ஒருபகுதியாக  கூட்டாக அண்ணாமலை, இபிஎஸ், அமித்ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, வரும் தேர்தலில் அதிமுக,  பாஜக இணைந்து செயல்படும். தேசிய அளவில் மோடி தலைமையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. மாநிலத்தில் எடப்பாடி தலைமையில் இந்த கூட்டணி அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 1998ஆம் ஆண்டு முதல் அதிமுக, பாஜக கூட்டணி தொடங்கியது.  ஒரு காலத்தில் பாஜக அதிமுக கூட்டணி 31 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. எனவே வருகின்ற தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக, பாஜக இணைந்துதான் ஆட்சி அமைய உள்ளது.  தமிழ்நாட்டில். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமையப் போக உள்ளது என தெரிவித்தார்.

அதிமுக தரப்பிலிருந்து என்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக எந்த வகையான டிமாண்டும் பாஜகவிடம் வைக்கவில்லை என தெரிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கலைவையான விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

“ அதிமுக - பாஜக இடையேயான அமைந்துள்ள கூட்டணியானது துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றதுதான். இந்த கூட்டணி, விரும்பி அமைந்தது போல் தெரியவில்லை. அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் பேசியபோது, அவர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement