For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து | டீ செலவு மட்டும் ரூ.27 லட்சமாம்... நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்...

09:52 PM Jul 26, 2024 IST | Web Editor
கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து   டீ செலவு மட்டும் ரூ 27 லட்சமாம்    நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்
Advertisement

கோவை குப்பை கிடங்கு தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட விவகாரம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில் அதற்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது இந்த குப்பை கிடங்கில் 253 ஏக்கர் பரப்பளவிற்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. கோவை நகரில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் இங்கே தான் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடைகாலத்தில் இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது இந்த குப்பை கிடங்கை சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் இங்கு ஆயிர கணக்கில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சியில் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று சாதாரண மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 333 தீரமானங்கள் கொண்டுவரபட்டது. அதில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 6.04.2024 முதல் 17-04-2024 ஆம் தேதி வரை கட்டுகடங்காமல் தீப்பற்றியதாகவும் இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. அதில் மொத்தம் செலவு 76 லட்சத்து 70 ஆயிரத்து 318 காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து இன்று நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிட்டது குறித்து மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. அதில், வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ பற்றிய சமயத்தில் தீ தடுப்பு பணியில் சுழற்சி முறையில் தீயனைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர் என சுமார் 500 லிருந்து 600 பணியாளர்கள் ஈடுபட்டார்கள்.சுழற்சி முயற்சியில் பணியாற்றியவர்களுக்கு மூன்று வேலை தரமான உணவு மற்றும் வெயில் காலம் என்பதால் 24 மணி நேரமும் குடிநீர், மோர், பிஸ்கட், டீ ஆகியவை வழங்கபட்டதாகவும் இதன் செலவாக 27.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

Tags :
Advertisement