For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 5 பேர் கைது!

01:34 PM Apr 03, 2024 IST | Web Editor
திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு  5 பேர் கைது
Advertisement

திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலையை நடித்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு,  தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டுபாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (எ) மாதேஸ்வரன்,  விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல்,  விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில்,  அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்,  முரளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இதில் தொடர்புடையவர்கள் யார் யார்? இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையிலான போலீசார் தீவிர
விசாரணை மேற்கொண்டனர்.  மாதேஷ் (எ) மாதேஸ்வரன் திருச்செங்கோடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து,  மத்திய பகுதிகளில் உள்ள 13 மதுபான கடைகளுக்கு இரவு நேர விற்பனைக்காக மது விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட்டை 35லிட்டர்,  50 லிட்டர் கேன்களில் பாண்டிச்சேரியிலிருந்து வாங்கி வந்து இங்கு போலியான மது தயாரிப்பது தெரிய வந்தது.  இதற்கு பயன்படுத்திய ஆல்கஹால்,  5400 லிட்டர் ஸ்பிரிட்,  60 ஆயிரம் பாட்டில்கள்,  40 ஆயிரம் மூடிகள்,  போலி லேபிள்கள் என வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  பின்னர் அவர்களிடமிருந்த நான்கு சக்கர வாகனம், ஒரு இரண்டு சக்கர வாகனம், (Eicher van ) மினி லாரி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார்? எங்கெல்லாம் போலி மது பாட்டில்கள் தயார் செய்துள்ளனர்,  என்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை காவல் நிலைய ஆய்வாளர் சுல்தான் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பிடிபடுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  முக்கியமான சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போலி மது பான ஆலை இயங்கி வந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த தொழில் இங்கு அமோகமாக நடைபெற்று இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags :
Advertisement