For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!

10:12 AM May 31, 2024 IST | Web Editor
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம்
Advertisement

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி. மற்றும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

2003-ம் ஆண்டு சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர், வெள்ளத்துரை. தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ‘கஸ்டோடியல் டெத்’ திற்கும் வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளத்துரை மீதான என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை இன்று பணி ஒய்வுபெற இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. சிபிசிஐடி பிரிவில் வெள்ளதுரை மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பணியிடை நீக்கம் குறித்து வெள்ளத்துரை நீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement