Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தேர்தல் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி!” - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

07:48 PM Jun 04, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி எனவும், நரேந்திர மோடி நடத்திய பிரசாரம் வரலாற்றில் நினைவுகூரப்படும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது:

இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் பொதுமக்களின் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி. இந்த தேர்தலானது பொதுமக்களுக்கும் மோடிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். மக்கள் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. குறிப்பாக ஆளும் கட்சியான பாஜக ஒரு நபர், ஒரு முகம் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது அவர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

மக்கள் பிரச்னைக்காகத்தான் நாங்கள் தேர்தலில் போராடினோம். மக்கள் இந்த பிரச்னைகளில் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஆதரவளித்தனர். நரேந்திர மோடி நடத்திய பிரசாரம் வரலாற்றில் நினைவுகூறப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நரேந்திர மோடி பரப்பிய பொய்களை பொதுமக்கள் புரிந்து கொண்டனர். 

ராகுல் காந்தி தனது இரு பயணங்களிலும் லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்தார் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவற்றிற்குத் தீர்வு காண்பதே எங்கள் பிரசாரத்தின் அடிப்படையாக அமைந்தது. பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், அடுத்த தாக்குதல் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் மீதுதான் இருக்கும் என்று மக்கள் நம்பினர். இந்த சதியில் இப்போது பாஜகவால் வெற்றிபெற முடியாது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இந்தச் சந்தர்ப்பத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால் அவர்களால் நாடு முழுவதும் எங்களுக்கு ஊக்கம் கிடைத்தது. கோடிக்கணக்கான தொழிலாளர்களும் எங்களுக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கும் நன்றி. இது தவிர, இந்தியக் கூட்டணியின் அனைத்து சகாக்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்களின் உரிமைகள், நாட்டின் பாதுகாப்பு, அரசியலமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்க நாம் அனைவரும் வரும் நாட்களில் போராட வேண்டும்”

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Tags :
CongressElections2024INCloksabha election 2024Mallikarjun KhargeNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article