For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குஜராத்தில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

குஜராத்தில் நேற்று இரவு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02:02 PM Apr 23, 2025 IST | Web Editor
குஜராத்தில் நேற்று இரவு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 4 3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்   மக்கள் அச்சம்
Advertisement

குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் இருந்து 160 கிலோ மீட்டர் வடக்கே கஞ்ச் நகரை மையமாக கொண்டு இரவு 11.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்துள்ளன.

Advertisement

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கட்சு மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது.

இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ள நிலையில் வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறினர். இந்த நிலஅதிர்வால் உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement