"எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள்" - பொன்முடி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!
விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஏப்.6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அவரின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் க.பொன்முடி வகித்து வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இதுதான் தமிழ்நாட்டில் திமுகவின் அரசியல் பேச்சுக்களின் தரம். பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சராகவும், தற்போது வனத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சராகவும் இருந்தார். தமிழக இளைஞர்கள் இதனை பொறுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது? இந்த அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக சுற்றுச்சூழல் அமைப்பும் அநாகரீகமானது.
This is DMK’s standard of political discourse in Tamil Nadu. Thiru Ponmudi was once the Higher Education Minister of Tamil Nadu & now Minister for Forests and Khadi, and the youth of Tamil Nadu are expected to tolerate this filth? Not just this Minister, the entire DMK ecosystem… pic.twitter.com/ENMq47hiPf
— K.Annamalai (@annamalai_k) April 11, 2025
இன்று அவரை ஒரு கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதன் மூலம், மக்கள் முன்னேறிச் செல்வார்கள் என்று நினைக்கிறார்கள், அவர்கள் துரதிர்ஷ்டவசமாக தவறாக நினைக்கிறார்கள்! இந்து தர்மத்தின் (சைவம் & வைணவம்) தூண்கள் மீதான திமுகவின் இடைவிடாத தாக்குதல்கள் என்றென்றும் பதிலளிக்கப்படாமல் போகாது. எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.