For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மக்கள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை" - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் மீது திமுக அரசுக்கு கவனம் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
06:54 AM Jun 14, 2025 IST | Web Editor
மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் மீது திமுக அரசுக்கு கவனம் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 மக்கள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை    தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Advertisement

சென்னை அடுத்த மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது  கான்கிரீட் தூண் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் பார்வையிட்டார்.

Advertisement

இதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மெட்ரோ மேம்பாலம் நிலைகுலைந்து உடைந்து விழுந்ததனால் ரமேஷ் உயிர் இறப்புக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை மிக முக்கியமான சாலையாக இருக்கிறது.

இந்த விபத்து மனித முயற்சியால் தடுத்து இருக்கக்கூடிய ஒரு விபத்து. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததால் ஏற்பட்ட விபத்தாகும். இந்த விபத்து ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த சாலையில் இதே மாதிரி 50 டன் இல் இருந்து 100 டன் இருக்கக்கூடிய பாலம் கீழ விழுந்தால் என்ன ஆகும் என்று நம்மால் சிந்தித்து கூட பார்க்க முடியவில்லை.

இதில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு அனுமதித்தாலும் அதற்கான நிதி பகிர்வை பகிர்ந்து கொடுத்தாலும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது மாநில அரசாகும். டெண்டர் முடிவு செய்வது பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இருக்கிறதா என்பதை மேற்பார்வையிடுவது, அடிப்படை பாதுகாப்பு இருக்கிறதா செயல் திட்டத்தில் முழுவதுமாக கண்காணிப்பது இவை எல்லாமே மாநில அரசின் உடைய கடமையாகும்.

இங்கு நிலை குலைந்து இருப்பது பாலம் மட்டுமல்ல மாநில அரசினுடைய நிர்வாக திறமையும் நிலை குலைந்து இருக்கிறது. ஒன்றல்ல திடீரென்று சாலையில் பள்ளமும் வருகிறது. இதே போன்று நொச்சி குப்பத்தில் மெட்ரோ பணிக்காக குழி தோண்டும்போது ஒரு பால்கனி கீழா விழுந்தது. இந்த பணி எப்படி நடந்து கொண்டிருக்கிறது? அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் கண்காணிக்கப்பட்டதா, கண்காணிப்பதற்கான ரெக்கார்டு இருக்கிறதா, எந்த அளவிற்கு மாநில அரசு மக்களின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ளது.

மத்திய அரசுக்கு நான் ஒரு கடிதம் எழுதுகிறேன் இது போன்ற விபத்துக்கள் நடந்திருக்கக் கூடாது என்று. யாருக்கு டெண்டர் விடுகிறார்கள் எல்என்டி முழுமையாக எடுத்திருந்தாலும் மற்ற பணியை மற்ற நிறுவனம் செய்கிறது. இதையெல்லாம் மேலும் கண்காணிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தாலும் தமிழகத்தில் உள்ள நிர்வாகத்தினர் அதைப்பற்றி எந்தவித பேச்சையும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவர்கள் அக்கறை இன்மையோடு இருக்கிறார்கள் இது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இது முற்றிலுமாக தமிழகத்தில் நடக்கக்கூடிய அத்தனை கட்டுமான பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடக்கிறதா அதற்கான பாதுகாப்பிற்கான என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ அதன் பாதுகாப்பு வழிமுறைகள் உட்பட்டு இருக்கிறதா என்று ஒட்டுமொத்தமாக ஒரு அறிக்கையை மாநில அரசு நிரூபிக்க வேண்டும்.

பல இடங்களில் சாலையில் கார் உள்ளே போகும் அளவிற்கு பள்ளம் விழுகிறது. இதனால் தமிழக மக்கள் பெரும் பாதிப்பு அடைகிறார்கள். தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளில் மீது மாநில அரசு கவனம் இல்லை. மத்திய அரசுருடன் மோதல் பிரச்சினைகள் அது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி வரையறை மொழி பிரச்சனை எல்லாவற்றிலும் மக்களின் அடிப்படைத் தேவை மீது முற்றிலும் கவனம் இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது.

இந்த ஒரு விபத்து மிகப்பெரிய வலியை உணர்த்துகிறது. நான் இங்கு வந்தது மத்திய அரசு எல்லா கட்டுமான பணிகளையும் உறுதிப்படுத்த வேண்டும், அதிகாரப்பூர்வமான பதிவு செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் நான் ஒன்று பதிவு செய்ய விரும்புகிறேன். கீழடியில் எப்பொழுது தொல்லியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. யாருடைய ஆட்சியில் தீவிர படுத்தப்பட்டது. நீங்கள் மத்திய அரசாங்கத்தில் காங்கிரசும் திமுகவும் இருந்தார்கள். அப்போது தமிழ்நாட்டில் தொல்லியல் துறைக்கு அவர்கள் ஒதுக்கிய தொகை 55 லட்சம் ரூபாய் ஆகும். கீழ்அடியில் பல தொன்மையான பொருட்கள் இருக்கிறது என்று தெரிந்து அறிக்கை வந்த பின்பும் ஒரு வருடம் திமுக அரசு இதைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி கவலைப்படவில்லை.

நரேந்திர மோடி வந்த பிறகுதான் ஆர்காலஜி சர்வீ விரிவுபடுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதற்கு மொத்தம் 55 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் உள்ள அகவாராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த கீழடியில் திமுக அரசு என்ன அக்கறை காட்டி இருக்கிறது. கீழடி தொன்மையை உலகுக அரங்கிற்கு உயர்த்தி மற்றும் உணர்த்தி கொண்டு இருக்கிறது என்றால் அது நரேந்திர மோடி அவர்களால் தான். ஏனென்றால் பல திட்டங்களையும் பல வழிமுறைகளையும் கொண்டு வந்தார்.

திமுக அரசுக்கு கீழ்டியை வைத்துக்கொண்டு முதலில் இருந்து கீழ் தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். கீழடி ஆராய்ச்சி பாஜக அரசுக்கு பெயர் வாங்கி கொடுக்க கூடாது என்று கீழடி கீழடி என்று அரசியலை திமுக அரசு செய்கிறது. தஞ்சாவூரில் உள்ள ஓலைச்சுவடிகளை டிஜிட்டல்லைஸ் செய்தது பாஜக அரசுதான். ஓலைச்சுவடியை டிஜிட்டல்லைஸ் செய்ததால் தமிழின் தொன்மை உலக அளவிற்கு எடுத்து சென்றது பாஜக அரசுதான். கீழடி தொன்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு பாஜகவுக்கு தான் பாராட்டு கொடுக்க வேண்டும்.

நீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள் எய்ம்ஸ் மாதிரி ஏதாவது ஒரு கட்டிடத்தை மருத்துவமனையை கட்டியிருக்கிறீர்களா. எய்ம்ஸ் கட்டிடம் தான் மதுரையில் இருக்கிறது நான்காவது வருடம் மாணவர்கள் படித்து முடித்து இருக்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை என விண்வெளி ஆராய்ச்சி மையமா என்று கேட்கிறார்கள். விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கூட நாம் கட்டிவிடலாம் மருத்துவமனையில் தான் என்னென்ன தேவை என்று கவனமாக உலகம் தர வாய்ந்த மருத்துவமனையாக கட்ட வேண்டும்.

இங்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் வெட்டு குத்து வாங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனை அது கிடையாது. எல்லா திட்டமும் பாஜக அரசு தான் கொண்டு வருகிறது. அதை வைத்து நீங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement