டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் : மேலும் ஒருவர் கைது..!
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. மேலும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி கொடுத்து உதவிய அமீர் ரஷித் அலி உள்பட 6 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் ஹரியானாவின் பரிதாபத்தை சேர்ந்த சாஹிப் என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் டெல்லி தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார். மேலும் உமர் நபி தாக்குதலை மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு சாஹிப்பின் வரை வீட்டில் தான் தங்கியிருந்திருகிறார். இதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.