For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'டெல்லி சலோ' போராட்டம் - விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!

01:02 PM Feb 13, 2024 IST | Web Editor
 டெல்லி சலோ  போராட்டம்   விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு
Advertisement

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் வரும் பிப்.13ம் தேதியான இன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தன. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். 

கடந்த 2021-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அம்மாநில தெருக்களில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள டெல்லி போலீசார் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகின்றனர்.

விவசாயிகள், வேளாண் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என தகவல் கிடைத்தது. இதையொட்டி, டெல்லியில் பிப்ரவரி 12-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு விவசாயிகள் அணி திரண்டால் அதைத் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று பஞ்சாப் – ஹரியாணா எல்லைகளில் ‘டெல்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா, ஜிந்த், ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பல போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஓடினர். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதட்டமாக இருந்து வருகிறது.

Tags :
Advertisement