Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி: 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!

01:43 PM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு 5-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், அதனை நேரம் கடத்தும் செயல் என விவசாயிகள் விமர்சித்துள்ளனர்.

Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் கடந்த பிப்.13 ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

இதனிடையே விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12, 16 மற்றும் 18-ம் ஆகிய தேதிகளில் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வு ஏற்படவில்லை. எனவே, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். 4-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு, பருப்பு வகைகள், மக்கா சோளம், பருத்தி உள்ளிட்டவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் என விவசாயிகளுக்கு சில முன்மொழிவுகளை அளித்தது. 

இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். ஆனால் மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களை விவசாயிகள் நிராகரித்தனர். இதன் காரணமாக இன்று (பிப். 21) காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம், பேரணியை மீண்டும் தொடங்குவோம் என விவசாயிகள் தெரிவித்தனர். 

விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதால் டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். இந்த தடுப்புகளை முறியடித்து உள்ளே செல்வதற்காக விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் எல்லைக்கு வந்துள்ளனர். போலீசார் வீசும் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக இரும்பிலான தகர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விவசாயிகளை 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு அழைத்துள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், விவசாய சங்கங்கள் இதனை, "நேரம் கடத்தும் செயல். அதனால்தான் எங்களை மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளன.

நாடாளுமன்றத்தை கூட்டி குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

Tags :
DelhiDelhi ChalofarmersharyanaMega MarchNews7Tamilnews7TamilUpdatesPoliceProtestsecurity
Advertisement
Next Article