For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சின்னத்திரை நடிகைக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது!

11:10 AM Feb 07, 2024 IST | Web Editor
சின்னத்திரை நடிகைக்கு கொலை மிரட்டல்  2 பேர் கைது
Advertisement

சின்னத்திரை நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் நடிகையின் டிரைவர் மற்றும் அவரது நண்பரை சிறையில் அடைத்தனர்.

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் வசிக்கும் கௌரி ஜனார்த்தன் என்பவர் ஜன.19-ம் தேதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  அந்த புகாரில் தனது சகோதரி ஷெரின் சாம்,  திரைப்பட நடிகையாக இருப்பதாகவும்,  கடந்த ஜன.07-ம் தேதி, அதிகாலை 04.30 மணியளவில் அவரின் அலுவலக டிரைவராக இருந்த கார்த்திக் என்பவர் குடிபோதையில் தனது வீட்டினுள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும்,  பின்னர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,  நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னையும், உன் அண்ணனையும் கொலை செய்து விடுவேன் என்று வாட்ஸ்ஆப் மூலம் தனது தங்கையை தொடர்பு கொண்டு,  தொடர்ந்து மிரட்டி வருவதாகவும்,  இதனால் தனது சகோதரி மனதளவிலும்,  உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின்பேரில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் அத்துமீறி நுழைதல்,  ஆபாசமாக பேசுதல்,  கொலை மிரட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  அதனைத் தொடர்ந்து ஓட்டுநர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இளையராஜாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கின் நண்பர் இளையராஜா கடந்த ஜன.25-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஓட்டுநர் கார்த்திக் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.  நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
Advertisement