For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!

09:44 PM Aug 06, 2024 IST | Web Editor
தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்  அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்
Advertisement

தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் தனியார் பேருந்துகள் பல்வேறு
பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அப்பேருந்துகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் படிகட்டின் வழியாக மேல் பகுதிக்குச் சென்றும்,படிக்கட்டுகளில் தொங்கியும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை அரசு மருத்துவமனை அருகே சென்ற தனியார் பேருந்து மீது ஏறி இளைஞர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இந்நிலையில் அப்பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமையாளரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற வங்கதேச முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது கைது!

இதனையடுத்து ஊழியர்கள் இருவரும் அந்த பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை
தேடிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், காவல்துறையினர் அவரிடம் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.மது போதையில் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கூறியதை கேட்காமல் பேருந்து மீது ஏறி நின்றதாகவும் அதற்கு தற்போது மன்னிப்புக் கோரி கொள்வதாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார்.

Tags :
Advertisement