For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கிரிக்கெட் என்றால் தோனி! அரசியல் என்றால் மு.க.ஸ்டாலின்!” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

02:25 PM Jun 27, 2024 IST | Web Editor
“கிரிக்கெட் என்றால் தோனி  அரசியல் என்றால் மு க ஸ்டாலின் ”   உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
Advertisement

ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட்,  கிரிக்கெட் என்றால் தோனி அதேபோல் அரசியல் களத்தில் முதல்வர் ஸ்டாலின் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.  அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் உசைன் போல்ட்,  தோனி என ஒரு சிலருடைய பெயர்களே வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்;  இவர்கள் தங்களது சாதனைகளை தாங்களே முறியடித்துக் கொள்வார்கள்.  அதேபோல் அரசியல் களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்,  ஒவ்வொரு தேர்தலிலும் தனது முந்தைய சாதனையை மிஞ்சுகின்ற வகையில் வெற்றிகளை குவித்து வருகிறார்.

அந்த வகையில் நமது திராவிட முன்னேற்றக் கழக அணி,  மக்களவை தேர்தல் களத்தில் சிறப்பாக விளையாடி,  உழைத்து, 40க்கு 40 பதக்கங்களையும் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.  இதனை அடுத்து துறை சார்ந்த பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அறிவிப்புகள்:

1. சமுதாயம் சார்ந்த அமைப்பில் இருக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் உருவாக்கப்படும்

2. அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட செயலாளருக்கு துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும்

3. வேலை வாய்ப்பினை எதிர்நோக்கும் தமிழ்நாடு இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு திறன் ஓலைகள் மற்றும் பணியிடப் பயிற்சி வழங்கும் திறன் தமிழ்நாடு நிறை பள்ளிகள் என்ற திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

4. நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் 45 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகள் விரிவு படுத்தப்படும்.

5. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த ஆயிரம் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அரசு உயர் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர சிகரம் தொடு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

6. நமது திராவிட மாடல் அரசின் முக்கிய குறிக்கோளான 2030 இல் ஒரு ட்ரில்லியன் அமெரிக்கன் டாலர் இலக்கை எட்டுவதற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும். முதலமைச்சர் எனவே பெண்கள் முறை சார்ந்த தொழில்கள் மற்றும் உயர்தர பணிகளில் ஈடுபடுவது அவசியமானதாகும் இதற்காக தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் உலக வங்கியின் உதவியுடன் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1185 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது இதில் இவ்வாண்டு 168 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்:

  1. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர் / வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும்.
  2. டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
  3. திருவெறும்பூர், மன்னார்குடி, உத்திரமேரூர், உசிலம்பட்டி, மேட்டூர், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூர், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, சேலம்-ஆத்தூர், கும்பகோணம், மேலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்-ஆத்தூர், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ருட்டி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் ரூபாய் 66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  4. இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர் அருகில் SDAT பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  5. SDAT நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
  6. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதியதாக அமைக்கப்படும்.
  7. மதுரை மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Diving Pool-உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.
  8. அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  9. அரியலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை Hockey ஆடுகளம் அமைக்கப்படும்.
  10. SD AT-யின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 2330- லிருந்து 2600-ஆக உயர்த்தப்படும் மற்றும்,
    i. உணவுப்படி நாள் ஒன்றுக்கு ரூபாய் 250-லிருந்து ரூபாய் 350-ஆகவும்,
    ii. சீருடை மானியத் தொகை ரூபாய் 4,000-லிருந்து ரூபாய் 6,000- ஆகவும்,
    iii. உபகரண மானியத் தொகை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000- ஆகவும் உயர்த்தப்படும்.
  11. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்திட Athlete Management System (AMS) Software செயல்படுத்தப்படும்.
  12. தமிழ்நாடு விளையாட்டுப் மே លក់ உடற்கல்வியியல் மற்றும் பல்கலைக்கழகம், Fencing, Badminton, Cycling, Archery w Table Tennis भुकी விளையாட்டுக்களுக்கும், நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் விளையாட்டரங்கில் Tennis விளையாட்டிற்கும், வேளச்சேரியில் உள்ள SDAT AGB வளாகத்தில் Swimming மற்றும் Gymnastics விளையாட்டுக்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் (Centre of Excellence) அமைக்கப்படும்.
  13. சென்னை, மேயர் இராதாகிருஷ்ணன் Hockey 6 / Hockey விளையாட்டிற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைப்பந்து மற்றும் கபாடி ஆகிய விளையாட்டுக்களுக்கான மாணவியர்களுக்கு கல்லூரி சிறப்பு நிலை விளையாட்டு விடுதியும் (Sports Hostel of Excellence), கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதிகள் கூடிய புதிய விளையாட்டு விடுதியும் (Sports Hostel) அமைக்கப்படும்.
  14. அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் 37 SDAT விளையாட்டு விடுதிகளுக்கு நவீன விளையாட்டு உபகரணங்கள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  15. மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை Hockey ஆடுகளத்துடன் கூடிய முதன்மை நிலை பயிற்சி மையம் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும்.
  16. SDAT-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களுக்கான மானியம் ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூபாய் 20 இலட்சத்திலிருந்து ரூபாய் 25 இலட்சமாகவும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டிற்கு ரூபாய் 15 இலட்சத்திலிருந்து ரூபாய் 20 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.
  17. புதிய இளைஞர் கொள்கை அறிமுகம் செய்யப்படும். தமிழ்நாட்டில் இளைஞர்கள் பெரும்பான்மையாக உள்ளதைக் கருத்தில் கொண்டு அவர்கள் நல்லொழுக்கத்துடன் பங்களிப்பினை சமூகத்திற்கு அளிக்கச் உயரிய செய்வதன் முக்கியத்துவத்தைக் கருதி, புதிய இளைஞர் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
  18. அனைத்து மாவட்டங்களிலும் "விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம்"- STAR அகாடமி உருவாக்கப்படும்.
  19. SDAT கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள் மற்றும் வெளி விளையாட்டரங்கங்களின் கட்டமைப்பு வசதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்திடும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.
  20. தேசிய மாணவர் மாணாக்கர்களுக்கு படை தற்போது வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை ரூபாய் 14 இலட்சத்திலிருந்து ரூபாய் 28 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் மற்றும் 30 எண்ணிக்கையிலான நவீன Air Rifle ரக துப்பாக்கிகள் வாங்கிடவும் நிதி உதவி அளிக்கப்படும்.
  21. 2024-ஆம் ஆண்டு முதல் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு ரூபாய் 50 இலட்சம் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.
  22. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (Champions Development Scheme) & យ விளையாட்டு வீரருக்கு ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூபாய் 2 இலட்சத்திலிருந்து ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  23. தலைசிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் Expert Coaches-ஆக பணியமர்த்தப்படுவர்.
  24. சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன் கூடிய உயர் செயல்திறன் மாணவர் விடுதி ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
Tags :
Advertisement