For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொகுதி பங்கீடு : திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

11:34 AM Feb 25, 2024 IST | Jeni
தொகுதி பங்கீடு   திமுக   மார்க்சிஸ்ட் கம்யூ  இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை
Advertisement

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.இந்திய யூனியன் முஸ்லில் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும், வேட்பாளர் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், முடிவு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாளை தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை - கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்று திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை 5.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags :
Advertisement