Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஷ்பூவை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!!

06:55 PM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி., எஸ்டி., பிரிவின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு காங். கமிட்டி எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குஷ்பூ மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார். இந்தப் பிரச்னையைத் தொடங்கிய நடிகர் மன்சூரலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடித்து வைத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பூ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்; மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து, அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி.எஸ்டி பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
AirportBJPchemmanjeriChennaicherryCongresskhushbooNews Updatenews7 tamilNews7 Tamil UpdatesPoliticsPRESS MEETRanjan KumarTamilNaduTrishaVelacherryviral newsviral video
Advertisement
Next Article