Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மார்ச் 19-ல் வெளியிடப்படும் - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!

01:51 PM Mar 17, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் (மார்ச் 19) வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டார். இதன்படி,ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் டெல்லியில் மக்களவைத் தேர்தல் அட்டவணையை நேற்று (மார்ச் 16) வெளியிட்டார்.

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தலை அறிக்கை வரும் மார்ச் 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் (மார்ச் 19) நடைபெறுவதாகவும், இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :
மகாயுத்தம் 2024CongressCongress partyDelhielection manifestoElections2024jairam rameshLoksabha Elections 2024MahayudhamNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article