For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மதசார்பற்ற கட்சி என்று கூறும் காங்கிரஸ், திமுக தான் பேராபத்து" - சீமான் பேட்டி!

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி அணி தான் பெரிய அணி தனித்து தனித்துவத்தோடு போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
10:17 AM May 29, 2025 IST | Web Editor
2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி அணி தான் பெரிய அணி தனித்து தனித்துவத்தோடு போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
 மதசார்பற்ற கட்சி என்று கூறும் காங்கிரஸ்  திமுக தான் பேராபத்து    சீமான் பேட்டி
Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் தங்கும் விடுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சமூகமே குற்றச் சமூகமாக மாறிவிட்டது. குற்றவாளிகளை அதிகாரத்தில் இருப்போர் பாதுகாக்கின்றனர். போதை நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது.

Advertisement

பாதுகாப்பு வீரர்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. பஹல்காம் தாக்குதல் நடத்தியோரை உடனடியாக சுட்டு பிடிக்காதது ஏன்? நதியை மறிப்பேன் என்று கூறுவது அறிவார்ந்த செயலா? அதுபோல இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் காற்றை நிறுத்த முடியுமா? நமது நாட்டுக்கு பாதுகாப்பு நாம் ஏன் வெளிநாடுகளுக்கு சென்று விளக்கமளிக்க வேண்டும்.

பிரதமரை சந்தித்த முதல்வர் ஏன் கீழடி அகழாய்வை வெளியிடாதது குறித்து பேசவில்லை. முதலில் தமிழக அரசு தமிழர்களின் தொன்மை நாகரீகம் என்று முதலில் அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நமது மொழியை கூட தான் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் பேசினால் சிரிக்கின்றனர்.

அனைத்து மொழிகளிலும் பேச அனுமதி கொடுத்தால் தான், அது நம் நாடாக இருக்கும். கச்சத்தீவை திருப்பி எடு, முடியாது என்றால் என்னை தனித்துவிடு என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கச்சத் தீவை கொடுத்ததை திருப்பி எடுக்க முடியாது என்பது தேசியவாதம்.

அதை நம் நாட்டுடன் சேர்க்க சொல்பவன் பிரிவினைவாதியா? பாஜக மதசார்புள்ள கட்சியாக வெளிப்படையாக உள்ளது. ஆனால் மதசார்பற்ற கட்சி என்று கூறும் காங்கிரஸ், திமுக தான் பேராபத்து. 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி அணி தான் பெரிய அணி தனித்து தனித்துவத்தோடு போட்டியிடும் திமுகவுக்கு எதிராக ஒர் அணியில் திரள வேண்டும் என பேசுபவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதத்திற்காகவும் சீட்டுக்காகவும் பேசுபவர்கள் தீமைமையை தீமையால் ஒழிக்க முடியாது கட்சி கொடியில் வண்ணங்கள் மட்டுமே மாற்றம் உள்ளது.

கொள்கை எண்ணங்களில் மாற்றம் இல்லை பேயை விகாரத்து செய்துவிட்டு பிசாசை கல்யாணம் செய்வதற்கு ஒப்பானது தான் அதிமுக -பாஜக கூட்டணியில் இணைவது திமுகவை அகற்றிவிட்டு உட்கார வைக்கப் போகிறார் புத்தரா? புனிதரா? என கேள்வி எழுப்பினார். எல்லோரும் கூட்டணியாக மட்டுமே நிற்கின்றனர். கொள்கையோடு நிற்கவில்லை வரும் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் பிறந்த மண்ணில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement