For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!

10:07 AM Nov 20, 2023 IST | Web Editor
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்  நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு
Advertisement

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் (டி & சி) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநர்,  நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது.  இந்நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் (டி & சி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியனாது.  இதனையடுத்து காலி பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக 10,600 பேர் விண்ணப்பிதிருந்தனர்.  அதிலிருந்து தேர்வு எழுத 1,600 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் அவர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சென்னை,  கோவை, திருநெல்வேலி உள்பட 10 இடங்களில் நேற்று நடைபெற்றது. பொதுத் தமிழ், பொது அறிவு மற்றும் தொழில் முறை திறனறிதல் குறித்து 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு உடற்தகுதி,  சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு, நேர்காணல் போன்றவை நடத்தப்படவுள்ளன.  இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி

இதுவரை போக்குவரத்துக் கழகங்களில் நேரடியாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் மட்டுமே இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்த நிலையில்,  முதன்முறையாக இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Tags :
Advertisement