For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீது புகார்! ஆபாசமாக பேசியதால் தாக்கியதாக விளக்கம்!

05:10 PM Mar 20, 2024 IST | Web Editor
இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீது புகார்  ஆபாசமாக பேசியதால் தாக்கியதாக விளக்கம்
Advertisement

இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஆபாசமாக பேசியதால் தாக்கியதாக நடிகை ராதா விளக்கம் அளித்துள்ளார். 

Advertisement

சென்னை சாலிகிராமம் லோகையா தெரு பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜ் (50). இவரது
மகன் பிரான்ஸிஸ் ரிச்சர்ட் (22).  இவர்கள் அதே பகுதியில் பல ஆண்டுகளாக
குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.  மேலும் அதே பகுதியில் சுந்தரா டிராவல்ஸ்
திரைப்பட நடிகை ராதா தனது மகன் தருண் உடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடிகை ராதாவை,  அதே தெருவில் வசித்து வரும்
பிரான்சிஸ் ரிச்சர்ட் என்பவர் கிண்டல் செய்ததாக நடிகை அளித்த புகாரில்
விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனை
தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரான்சிஸ் உறவினர் ஒருவர் நடிகை
ராதாவின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்தாக மீண்டும் காவல்
நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய
போது சமாதானமாக போவதாக ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி இரவு பிரான்சிஸ் ரிச்சர்ட் வெளியே சென்று
விட்டு வீட்டுக்கு வரும் பொழுது நடிகை ராதா மற்றும் அவருடைய மகன் தருண் ஆகிய
இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.  பின்னர் வாக்குவாதம் முற்றி நடிகை ராதா மற்றும் மகன் தருண் இருவரும் சேர்ந்து பிரான்ஸிஸ் ரிச்சர்டை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பிரான்சிஸ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்
புகார் அளித்தார்.  இதன்பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நடிகை ராதா மற்றும் அவரது மகன் இணைந்து பிரான்சிசை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த நடிகை ராதா,  தன்னைப் பற்றி தொடர்ச்சியாக
ஆபாசமாக பேசி வந்ததால் பிரான்சிஸை தாக்கியதாகவும்,  தொடர்ச்சியாக சாலையில்
செல்லும் போது தங்களை பற்றி இழிவான வார்த்தைகளில் பிரான்சிஸ் பேசி வந்ததாகவும்
தெரிவித்தார்.

ஏற்கனவே இது தொடர்பாக பிரான்சிஸ் மீது புகார் அளிக்கப்பட்டு,  அவர் மீது
வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில்,  முன் ஜாமீன் பெற்று மீண்டும் இதுபோன்று
தன்னை பேசி ஆபாசமாக வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் தான்
பிரான்சிஸ் மீது புகார் அளித்ததினால்,  அவரது உறவினர் தங்களது வீட்டின்
சிசிடிவி கேமராவை உடைத்ததாகவும் நடிகை ராதா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement