For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ தொடங்கியது - மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வருகிறார்.
05:41 PM May 31, 2025 IST | Web Editor
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வருகிறார்.
மதுரையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ தொடங்கியது   மக்கள் உற்சாக வரவேற்பு
Advertisement

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். தொடர்ந்து, இன்று மதியம் 1.05 மணியளவில் மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்கள் அளித்த வேஷ்டி, சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அவனியாபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வருகிறார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர். அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெறுகிறது. இறுதியில், முன்னாள் மேயர் முத்து சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Tags :
Advertisement