For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கட்டுக்கட்டாக பணம்...அதிர்ந்த அமலாக்கத்துறை! பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்!

11:28 AM Nov 23, 2023 IST | Web Editor
கட்டுக்கட்டாக பணம்   அதிர்ந்த அமலாக்கத்துறை  பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்
Advertisement

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.100 கோடி மேல் பொதுமக்களிடம் மோசடி செய்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர்.

குறிப்பாக, ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர். இது மட்டுமின்றி 11 மாதம் சீட்டு கட்டினால் 12ஆம் மாத தவணையை இலவசம் என்றும் அறிவித்தனர்.

இதனை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்திய நிலையில், கடந்த மாதம் பிரணவ் ஜுவல்லர்ஸ் அனைத்து நகைகடைகளும் மூடி, அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.

இதையும் படியுங்கள்:ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் | ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.Tech., பட்டதாரி கைது!

இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 11 கிளைகளில் பெரும்பாலான இடங்களில் போலி நகைகள் மற்றும் கவரிங் நகைகளை வைத்து பொதுமக்களை மோசடி செய்தது கண்டுபிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து,  பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில்  போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 100 சவரன் தங்க நகைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ச்சியாக பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில்,  இந்த நிறுவனம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (நவ.22) தமிழ்நாடு முழுவதும் பிரணவ் ஜூவல்லர்ஸ் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 24 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் இந்நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்து கணக்கு காட்டி இருப்பதும் அமலாக்கத் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement