For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! - டெல்லியில் பரபரப்பு!

03:25 PM Jun 12, 2024 IST | Web Editor
ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்    டெல்லியில் பரபரப்பு
Advertisement

டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள ரயில் அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் ரயில் அருங்காட்சியகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரயில் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அருங்காட்சியக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

ரயில் அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு கண்டறியும் குழு, வெடிகுண்டு செயலிழக்கும் படை, தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : “அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை” – டி.டி.வி.தினகரன்!

இதையடுத்து, காவல்துறையினரின் விசாரணைக்கு பிறகு, ரயில் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வந்த தகவல் போலியானது என தெரியவந்தது. மின்னஞ்சலை அனுப்பியவர் மேலும் சில அருங்காட்சியகங்களுக்கும் அனுப்பியதாக தகவல்கள் தெரிவித்தன.டெல்லி ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இதுபோன்ற பல மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இந்த வழக்குகளைச் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
Advertisement