Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஏழை என்ற ஜாதி இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஜக ஆட்சி” - அண்ணாமலை பேச்சு!

08:56 PM Dec 27, 2023 IST | Web Editor
Advertisement

ஏழை என்ற ஜாதி இருக்கக் கூடாது என்பதற்காக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது, ஒன்பது ஆண்டு ஆட்சியில், ஒரு பைசா திருடி விட்டார் என்று குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

”இந்தியாவில் பாஜக கட்சி வீடற்றவர்களுக்கு நான்கு கோடி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் குடிசை வீட்டில் இருக்கக் கூடாது, கான்கிரீட் வீடுகளில் செல்ல வேண்டுமென மோடி நினைக்கிறார். மோடி ஆட்சிக்கு வரும்போது 67% வீடுகளில் மட்டுமே கேஸ் அடுப்புகள் இருந்த நிலையில் தற்போது 99.9% வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

விவசாயிகளுக்கான ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். 6000 ரூபாய் விவசாயிகளுக்கு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தியாவில் கடைசி ஏழைகள் இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சி இருக்கும் என கட்சி ஆரம்பிக்கும் போது தெரிவித்தார்கள். தற்போது திரும்பி பார்த்தாலும் அந்த இலக்கு எட்டப்படவில்லை. இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஐந்து முறை முதலமைச்சராக இருந்து செய்ய முடியாததை மோடி செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும் 56 லட்சம் கழிப்பறைகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. 

ஒன்பது ஆண்டு ஆட்சியில், ஒரு பைசா திருடி விட்டார் என்று குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு மோடி அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, இன்ப நிதி என தலைமுறை தலைமுறையாக அரசியல் செய்து ஏழை மக்கள் ஏழையாகவே உள்ளனர். அவர்கள் அரசியல் சாமானிய மக்களுக்கான அரசியல் அல்ல, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும், கோபாலபுரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திமுக என்ற கட்சி நடக்கிறது.

ஏழைத் தாய்மார்களின் வயிற்றிலிருந்து பிறந்த பெண்கள் இந்தியாவில் ஆட்சியாளராக வரவேண்டும் என்பதற்காக 33% இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக நீதி, சமூக நீதி என திமுக பேசுகிறார்கள். ஆரம்ப கால கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தம் நன்றாகத்தான் இருந்தது. கூட்டணி கட்சியாக இருந்ததற்கு திமுக கணக்கிலிருந்து கம்யூனிஸ்ட் காரர்களுக்கு 25 கோடி ரூபாய் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏழை என்ற ஜாதி இருக்கக் கூடாது என்பதற்காக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 25 கோடி ரூபாய்க்கு கம்யூனிஸ்ட் அடகு வைத்த தலைவர்கள் திமுகவுடன் உள்ளனர். வரும் தேர்தலில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தேர்தலில் சரித்திரம் படைக்கும். பாஜகவை திமுக மத கட்சி என கூறுகிறார்கள். 70 ஆண்டு காலமாக இதே பொய்கை திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர். குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் ஆட்சியை பார்த்து தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்து செயல்படுகிறேன்.”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPCMO TamilNaduCongressDMKMK StalinNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO India
Advertisement
Next Article