"புயல் பாதிப்பு ஏற்பட்டால் பாஜக உதவி செய்ய தயார்" - நயினார் நாகேந்திரன்!
பாஜக சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள், புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவி புரியவும் தயார் நிலையில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
09:58 AM Oct 28, 2025 IST
|
Web Editor
Advertisement
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் இருந்து தமிழரை பாரத பிரதமர் நரேந்திர மோடி துணை குடியரசுத் தலைவர் ஆகியுள்ளார். தமிழ்நாட்டில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. பாஜக சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள், புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவி புரியவும் தயார் நிலையில் இருக்கிறோம்.
Advertisement
பருவமழை தவறாமல் வந்துள்ளது. SIR என்றாலே திமுகவுக்கு அலர்ஜி. கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். SIR நீக்கல், சேர்த்தல் பட்டியலை தமிழக அரசு அதிகாரிகள் தான் செய்கப்போகிறார்கள் எதற்கு அஞ்சுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Next Article