For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

03:11 PM Mar 18, 2024 IST | Web Editor
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ் க்கு தடை  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Advertisement

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில்,  “அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி,  அறிக்கைகள் வெளியிடுவது,  கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.  எனவே,  அதிமுக கட்சியின் பெயர்,  சின்னம்,  கொடியை அவரும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.  இந்நிலையில் இன்று (மார்ச் 18) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதித்த நிரந்தர தடையை உறுதி செய்துள்ளது.

Tags :
Advertisement