For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை - நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

12:32 PM Jan 03, 2024 IST | Web Editor
3 வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை   நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்
Advertisement

3-வது முறையும் அமலாக்கத்துறையின் சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்தார்.

Advertisement

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகாரின் விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால்,  அது அரசியல் நோக்கத்தில் அனுப்பப்பட்டதாகக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் தவிர்த்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.  ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அன்றும் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்க்கும் வகையில் 10 நாள் தியான பயற்சிக்காக பெயர் குறிப்பிடாத இடத்துக்கு சென்று அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் தவிர்த்தார்.  இந்த நிலையில், அரவிந்த கெஜ்ரிவால் இன்று (03-01-24) ஆஜராக அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கெஜ்ரிவால் இன்றும் ஆஜராகமாட்டார் என்று ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லிஅமைச்சர் சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது:

"அரவிந்த்  கெஜ்ரிவாலை கைது செய்யும் நோக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,  கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் செய்வதை தடுக்க நினைக்கின்றனர்.  மனீஷ் சிசோடியாவை கைது செய்து ஓராண்டு ஆகியும்,  அவருக்கு எதிரான ஆதாராங்களை அமலாக்கத்துறையினரால் திரட்ட முடியவில்லை.  ஆகையால்,  தற்போது கெஜ்ரிவாலை கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.  பாஜகவினரால் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட சுவேந்து அதிகாரி,  முகுல் ராய்,  பேமா காண்டு,  அஜித் பவார்,  ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர்." என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement