For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைது | அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது -பிரியங்கா காந்தி கண்டனம்!

05:20 AM Mar 22, 2024 IST | Web Editor
அரவிந்த் கெஜ்ரிவால் கைது   அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது  பிரியங்கா காந்தி கண்டனம்
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா காந்தி கண்டனம்: 

தேர்தல் காரணமாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை இவ்வாறு குறிவைப்பது முற்றிலும் தவறானது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த வகையில் அரசியலை குறைப்பது பிரதமருக்கோ அல்லது அவரது அரசுக்கோ பொருந்தாது. உங்கள் விமர்சகர்களை தேர்தல் போரில் எதிர்த்துப் போராடுங்கள், அவர்களைத் துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள், நிச்சயமாக அவர்களின் கொள்கைகள் மற்றும் வேலை செய்யும் பாணியைத் தாக்குங்கள் - இதுதான் ஜனநாயகம்.

ஆனால் இவ்வாறு நாட்டின் அனைத்து நிறுவனங்களின் அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒருவரது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதும் அழுத்தங்களை பிரயோகித்து பலவீனப்படுத்துவதும் ஜனநாயகத்தின் ஒவ்வொரு கொள்கைக்கும் எதிரானது.

நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் இரவு பகலாக ED, CBI, IT போன்றவற்றின் அழுத்தத்தில் இருப்பதாகவும், இதர்கெல்லாம் மேலாக ஒரு முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

Tags :
Advertisement