For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" - அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு!

11:35 AM Jul 07, 2024 IST | Web Editor
 ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்    அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு
Advertisement

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்"  என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேசியுள்ளார்.

Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதியின் டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்தார். அவருடன் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாயாவதியின் அரசியல் வாரிசுமான ஆகாஷ் ஆனந்தும் சென்னை வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு பொதுமக்களிடம் உரையாற்றிய மாயாவதி தெரிவித்ததாவது..

“ தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.  சட்டம் -ஒழுங்கை பராமரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்த கொலை வழக்கின் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை பகுஜன் சமாஜ் கட்சி செய்யும். அவரது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.ஆம்ஸ்ட்ராங் விட்டுச்சென்ற பணிகளை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர வேண்டும்” இவ்வாறு மாயாவதி உரையாற்றினார்.

Tags :
Advertisement