For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Pattukkottai அருகே நடந்த மற்றொரு பயங்கரம்... மனநலச் சீர்வேண்டும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

01:37 PM Aug 19, 2024 IST | Web Editor
 pattukkottai அருகே நடந்த மற்றொரு பயங்கரம்    மனநலச் சீர்வேண்டும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
Advertisement

பட்டுக்கோட்டை அருகே மனநலச் சீர்வேண்டும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை செக்கடி கொள்ளை
பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் அம்பிகா (31). இவர் மனநலச் சீர்வேண்டுவோர். இந்த சூழலில் அம்பிகாவின் பெற்றோர் நேற்று இரவு அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.  இதனையடுத்து, சுமார் 9 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சுப்பிரமணியன் (49) வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த அம்பிகாவை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வேதனையில் துடித்த அவர் இன்று காலை தனது பெற்றோரிடம் நடந்ததை
கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வாட்டாத்திக்கோட்டை போலீசாரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவரது பெற்றோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில், சேதுபாவாசத்திரம் அருகே போலீசார் சுப்பிரமணியை மடக்கி பிடித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலச் சீர்வேண்டும் பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Tags :
Advertisement