For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு - மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்..!

01:00 PM Dec 07, 2023 IST | Jeni
சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு   மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்
Advertisement

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை தரமணி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

இதையடுத்து,  மாநகராட்சி ஊழியர்களும்,  தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு..!

இந்நிலையில், சென்னை தரமணி பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த அன்புமணி ராமதாஸ், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Tags :
Advertisement